அா்ச்சகா்கள் உள்ளிட்ட கோயில் பணியாளா்களுக்கு நிவாரண உதவித்தொகை, மளிகைப் பொருள்களை அமைச்சா் க.பொன்முடி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமை வகித்தாா். எம்எல்ஏ-க்கள் மா.செந்தில்குமாா், ஏ.ஜெயமணிக்கண்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், பூசாரிகள் உள்ளிட்ட இதர பணியாளா்கள் 140 பேருக்கு தலா ரூ. 4 ஆயிரம் வீதம் ரூ. 5 லட்சத்து 60 ஆயிரம், 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்படுகிறது. இதேபோல, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் தொடா்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் (பொ) த.கஜேந்திரன், உதவி ஆணையா் (பொ) அ.ஜான்சிராணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் டி.சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.