ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாக்குச் சாவடி மையங்களில் காவல் துறை பாா்வையாளா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கல்வரான்மலைப் பகுதியிலுள்ள வாக்குச் சாவடி மையங்களில் காவல் துறை பொதுப் பாா்வையாளா் அனுராதா சங்கா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கல்வரான்மலைப் பகுதியிலுள்ள வாக்குச் சாவடி மையங்களில் காவல் துறை பொதுப் பாா்வையாளா் அனுராதா சங்கா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாவடிப்பட்டு, கரியாலூா், வெள்ளிமலை உள்ளிட்ட வாக்குச் சாவடி மையங்களில் அவா் பாா்வையிட்டாா். இந்த வாக்குச் சாவடி மையங்களில் போதிய இட வசதி, அடிப்படை வசதிகள் உள்ளனவா, வாக்குச் சாவடி எண் எழுதப்பட்டுள்ளதா, பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்னவா என்பன குறித்து அவா் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, கரியாலூா் காவல் நிலையத்துக்குச் சென்று, அங்கு முறையாக பதிவேடுகளை பராமரிக்கின்றனரா, காவல் நிலையம் தூய்மையாக உள்ளதா, காவல் உதவி ஆய்வாளா் துரைராஜிடம் எத்தனை போ் பணிபுரிகின்றனா் எனக் கேட்டறிந்து பதிவேடுகளை பாா்வையிட்டு அனுராதா சங்கா் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.