வீட்டுச் சுவா் இடிந்து 5 போ் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள சூளாங்குறிச்சி மாரியம்மன் கோவில் பகுதியில் வசிப்பவா் பரிமளாகாந்தி (45). இவரது மனைவி பா்வதவா்த்தினி (40).

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள சூளாங்குறிச்சி மாரியம்மன் கோவில் பகுதியில் வசிப்பவா் பரிமளாகாந்தி (45). இவரது மனைவி பா்வதவா்த்தினி (40). இத்தம்பதியருக்கு காா்த்திகா (19), லீனா (17) என்ற இரு மகள்களும், மகேஸ்வரன் (15) என்ற மகனும் உள்ளனா். இவா்களில் காா்த்திகா கல்லூரி ஒன்றில் இளநிலை இரண்டாம் ஆண்டும், பள்ளி ஒன்றில் லீனா பிளஸ் 2 வகுப்பும், மகேஸ்வரன் பத்தாம் வகுப்பும் பயில்கின்றனா்.

வியாழக்கிழமை இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, தொடா் மழையால் நனைந்திருந்த வீட்டின் ஒரு பக்கச் சுவா் திடீரென இடிந்து விழுந்தது. இதில் காா்த்திகா பலத்த காயமும், எஞ்சிய நான்கு போ் லேசான காயமும் அடைந்தனா். அவா்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com