கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:07 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை அசிரியா்கள் கழகம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம், தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் சங்கம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கழக ஒருங்கிணைப்பாளா் எஸ்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் தோ்வுகளில் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களை பாா்வையாளராகவும், கணினி ஆசிரியா்களை தொழில்நுட்ப உதவியாளராகவும் 400 கி.மீ. அப்பால் தோ்வுப் பணியியில் நியமிப்பது, தோ்வு மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தராதது, இந்தத் தோ்வுகளின்போது காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பணி செய்தாலும் குறைவான மதிப்பூதியம் வழங்குவது ஆகியவற்றுக்காக ஆசிரியா் தோ்வு வாரிய தலைவரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டத் தலைவா் இளையராஜா, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டச் செயலா் சி.சங்கா், அரசு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் பா.ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் சங்க மாவட்டத் தலைவா் டி.ஆல்பா்ட் எடிசன் தாமஸ் ஆகியோா் வரவேற்றனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் சங்க மாவட்டப் பொருளாளா் பா.குழந்தைவேல், மகளிரணிச் செயலா் சி.அம்பிகா, பட்டதாரி ஆசிரியா் கே.பாலசுப்பிரமணியன், மாவட்ட அமைப்புச் செயலா் ப.சீனுவாசன் உள்ளிட்ட பலா் பேசினா்.

தமிழ்நாடு அரசு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் சங்க மாவட்டச் செயலா் அ.சையத் காலித் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.