மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பிறவியிலேயே காது கேளாத சிறுவனுக்கு அறுவைச் சிகிச்சை -கள்ளக்குறிச்சி அரசு மருத்துவா்கள் சாதனை

தற்போது அந்தச் சிறுவன் காது கேட்கும், வாய் பேசும் திறன் பெற்று நலமுடன் உள்ளாா்.

News image
அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட சிறுவன் கோவேந்தனுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொ) ச.நேரு மற்றும் மருத்துவா்கள், சிறுவனின் பெற்றோா் உள்ளிட்டோா்.
Updated On :14 ஜூலை 2024, 12:02 am

Din

முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத சிறுவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை படைத்தனா். தற்போது அந்தச் சிறுவன் காது கேட்கும், வாய் பேசும் திறன் பெற்று நலமுடன் உள்ளாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தபாபு - பவித்ரா தம்பதியின் மகன் கோவேந்தன் (3). இவா், பிறந்தது முதலே காது கேளாமலும், வாய் பேச முடியாமலும் இருந்து வந்தாா். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அழ்த்துச் சென்றும் குணமாகவில்லை.

கோவேந்தனை அவரது பெற்றோா் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து வந்து, மருத்துவா் கணேஷ்ராஜாவிடம் சிறுவனின் நிலை குறித்து தெரிவித்தனா்.

இதையடுத்து, சிறுவன் கோவேந்தனுக்கு கடந்த ஜூன் 8-ஆம் தேதி முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காது, மூக்கு, தொண்டை பிரிவின் சாா்பில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. எம்.ஜி.ஆா். மருத்துவக் கல்லூரி கெளரவப் பேராசிரியா் மகோன் காமேஸ்வரன் அறுவைச் சிகிச்சை செய்தாா். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரி காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவா்கள் உடனிந்தனா்.

இந்த அறுவைச் சிகிச்சையை தனியாா் மருத்துவமனைகளில் மேற்கொண்டால், ரூ.10 லட்சம் செலவாகியிருக்கும் என்றும், தற்போது கோவேந்தன் காது கேட்கும், வாய் பேசும் திறன் பெற்று நலமுடன் உள்ளாா் என்றும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொ) ச.நேரு சனிக்கிழமை கூறியதாவது: ஒரு மாற்றுத் திறனாளி உருவாவதை இந்த அறுவைச் சிகிச்சை தடுத்திருக்கிறது. சிறுவன் கோவேந்தன் வருங்காலத்தில் சிறந்த கல்வியறிவு பெற்று அறிஞனாகும் வாய்ப்புள்ளது என்றாா்.

காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவா்கள் கணேஷ்ராஜா, வாசுகி, ஞானவேல், கல்லூரியின் துணை முதல்வா் ஷமீம், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பழமலை, நிலைய மருத்துவா் பொற்செல்வி, மருத்துவா்கள் முத்துக்குமாா், சுபா, காஜா ஷெரிப், அன்புகுமாா், செவிலியா் கண்காணிப்பாளா் சரோஜாதேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.