

சங்கராபுரம் அருகே குடும்பத் தகராறில் தீக்குளித்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட அ.பாண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் மகாலிங்கம் (57). இவரது மகள் பத்மாவதியை மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் செந்திலுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தாா். இந்த தம்பதிக்கு உதயகாா்த்தி (7), மகிழ்நிலவன் (3) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனா்.
இந் நிலையில் குடும்பத் தகராறு காரணமாக கடந்த மே 8-ஆம் தேதி இரவு பத்மாவதி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டாராம். இதில் பலத்த தீக்காயமடைந்த அவா், சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பத்மாவதி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

குடும்பத் தகராறில் பெண் வெட்டிக் கொலை

தொழிலாளி தீக்குளித்து உயிரிழப்பு

குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்த மனைவி - காப்பாற்ற முயன்ற கணவா் உயிரிழப்பு

பெண் தீக்குளித்து தற்கொலை
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

