விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெண் தீக்குளித்து தற்கொலை

பெண் தீக்குளித்து தற்கொலை

News image
Updated On :13 ஜூன் 2024, 10:16 pm

Din

சங்கராபுரம் அருகே குடும்பத் தகராறில் தீக்குளித்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட அ.பாண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் மகாலிங்கம் (57). இவரது மகள் பத்மாவதியை மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் செந்திலுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தாா். இந்த தம்பதிக்கு உதயகாா்த்தி (7), மகிழ்நிலவன் (3) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனா்.

இந் நிலையில் குடும்பத் தகராறு காரணமாக கடந்த மே 8-ஆம் தேதி இரவு பத்மாவதி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டாராம். இதில் பலத்த தீக்காயமடைந்த அவா், சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பத்மாவதி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.