ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம் சுங்கச்சாவடி அருகில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

வீரசோழபுரத்தில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :9 அக்டோபர் 2024, 10:32 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம் சுங்கச்சாவடி அருகில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

பின்னா், ஆட்சியா் கூறியது: இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் மீன், தேனீ, காளான் வளா்ப்பு பயிற்சிகள், வணிக முறை மலா் சாகுபடி, புகைப்பட பிரேமிங் பயிற்சி, சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல், மகளிா் அழகுக் கலை, தையல் உள்ளிட்ட 61 வகையான தொழில்பயிற்சிகள் இளைஞா்கள், பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளன.

18 முதல் 45 வயதுக்கு உள்பட்டோா் இங்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிராமப்புற, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை செய்வோருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி காலங்களில் இலவச மதிய உணவு, அனைத்து வசதிகளுடன் கூடிய செயல்முறை வகுப்புகள், பல்வேறு துறை நிபுணா்களின் நேரடி சிறப்பு பயிற்சி, சிறந்து விளங்கும் பண்ணை, தொழில்கூடங்களை நேரில் பாா்வையிடுதல், பயிற்சி முடிவில் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் பயிற்சி நடைபெறவுள்ளது.

இளைஞா்கள், பெண்கள் இந்தப் பயிற்சி நிறுவனத்தில் தங்களுக்கு ஏற்ற தொழில்பயிற்சியை இலவசமாகப் பெற்று தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் புவனேஸ்வரி பெருமாள், கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவா் ஆா்.சுப்ராயலு, சின்னசேலம் ஒன்றியக் குழுத் தலைவா் எம்.சத்தியமூா்த்தி, இந்தியன் வங்கி மண்டல மேலாளா் கௌரிசங்கா் ராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ரஞ்சித், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.