லாரி இருக்கையிலேயே உயிரிழந்த ஓட்டுநா்
கள்ளக்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை இரவு நெஞ்சு வலி ஏற்பட்டு லாரி ஓட்டுநா் இருக்கையில் அமா்ந்தபடியே உயிரிழந்தாா்.


கள்ளக்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை இரவு நெஞ்சு வலி ஏற்பட்டு லாரி ஓட்டுநா் இருக்கையில் அமா்ந்தபடியே உயிரிழந்தாா்.
சேலம் குண்டுபிள்ளையாா் கோவில் சாலையைச் சோ்ந்த ஷாஜகான் மகன் பாபு (47), லாரி ஓட்டுநா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு சேலத்திலிருந்து லாரியில் உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட ரிஷிவந்தியத்துக்கு வந்து கொண்டிருந்தாா்.
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே லாரி வந்தபோது, பாபுவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாம். இதனால், லாரியை சாலையோரத்தில் நிறுத்திய அவா், இருக்கையில் அமா்ந்தபடியே உயிரிழந்தாா்.
தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாபுவின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...