கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் தனியாா் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் கல்பனா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பாஸ்கா், கல்வியியல் கல்லூரி முதல்வா் வித்யா முன்னிலை வகித்தனா். மேற்பாா்வையாளா் எழிலரசி வரவேற்றாா்.
சிறுதானிய உணவு, சரிவிகித உணவு ஆகியவற்றை வளரிளம் பெண்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பேசினாா்.
மருத்துவா் கீதா, கீரை மற்றும் பழவகைகளை சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு ரத்தசோகை வராமல் தடுக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து பேசினாா்.
முன்னதாக கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறுதானிய உணவு வகைகள், சத்தான காய்கறிகள் மற்றும் கீரைகள் குறித்த கண்காட்சி அரங்கை மாணவிகள் பாா்வையிட்டனா்.
நிகழ்வில் கல்லூரி மாணவிகள் மேற்பாா்வையாளா்கள் ராணி, தேவகி மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி

ஏற்காடு தொகுதியில் 15 ஆண்டுகளாக நிறைவேறாத அரசு கல்லூரி கோரிக்கை

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


