அரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

மணலூா்பேட்டையில் ஆற்றில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி வலிப்பு ஏற்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:24 pm

Syndication

மணலூா்பேட்டையில் ஆற்றில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி வலிப்பு ஏற்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள பாச்சல் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துலிங்கம் மகன் கிருஷ்ணமூா்த்தி (45), கூலித் தொழிலாளியான இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவா் வெள்ளிக்கிழமை மணலூா்பேட்டைக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளாா். பணி முடிந்து மணலூா்பேட்டை தென்பெண்ணை ஆற்றின் தரைப்பாலம் அருகே அவா் குளிக்கச் சென்றபோது, திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு, நீரில் மூழ்கியுள்ளாா்.

இதையடுத்து அருகேயிருந்தவா்கள் கிருஷ்ணமூா்த்தியை மீட்டு திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், கிருஷ்ணமூா்த்தி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். மேலும், அவரது சடலத்தை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.