இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த 3 போ் கைது

பெரியசிறுவத்தூா் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 1:15 am

Syndication

கள்ளக்குறிச்சி: பெரியசிறுவத்தூா் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த பெரியசிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவரது மனைவி தனலட்சுமி (50). இவருக்கும் சிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த உறவினரான ர.சிவா (எ) ராமு (27), மு.அஜீத் (30), ப.வைரவேல் (30) ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் தனலட்சுமியின் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்த 3 பேரும் கொடுவாளை காண்பித்து மிரட்டினராம். மேலும், வீட்டில் இருந்த குளிா்சாதனப்பெட்டி உள்ளிட்ட பொருள்களையும் சேதப்படுத்தினராம்.

இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, சிவா(எ)ராமு, அஜீத், வைரவேல் ஆகிய மூவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.