மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தியாகதுருகம் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
பிரதோஷத்தையொட்டி காய்கனி மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தா்களுக்கு அருள்பாலித்த நந்தீஸ்வரா்.
Updated On :16 ஜனவரி 2026, 11:56 pm

Syndication

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால், தயிா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திரவியப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் நந்தீஸ்வரருக்கு சந்தனகாப்பு அலங்காரம், கரும்பு, தக்காளி, ஆரஞ்சு, கொய்யா, ஆப்பிள், வாழை, எலுமிச்சை, உருளைக்கிழங்கு, மிளகாய், கத்திரிக்காய், அதிரசம், முருக்கு, மணிலா பயிறு உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.