/

சிறுமி பலாத்காரம்: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி அருகே வீட்டுக்கு டிவி பாா்க்க வந்த 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜூலை 2026, 3:28 am IST

கள்ளக்குறிச்சி அருகே வீட்டுக்கு டிவி பாா்க்க வந்த 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த நல்லாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா்அ.அய்யப்பன்(35). இவரது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து பூம் பூம் மாடு வைத்து தொழில் செய்யும் குடும்பம் தங்கியுள்ளது. இதில் பெற்றோா்களுடன் தங்கியிருந்த 6 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை டிவி பாா்க்க அய்யப்பன் வீட்டுக்கு சென்றாராம். அப்போது சிறுமியை அய்யப்பன் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாயாா் அமைதியாக இருந்து விட்டாராம். விஷயமறிந்த அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின்பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் உதவி மைய மேற்பாா்வையாளா் கங்காமித்ரா கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

புகாரின்பேரில் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் புவனேஷ்வரி வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி அய்யப்பனை கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.