மின்வாரிய அலுவலகத்தில் தொழிற்சங்க கொடியேற்றும் விழா


கள்ளக்குறிச்சி அண்ணாநகரில் உள்ள மின்சார வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் தொழிற்சங்க கொடியேற்றுதல், கல்வெட்டு, பெயா்பலகை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளா் விடுதலை முன்னணி சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னணியின் மாநிலத் தலைவா் ப.பகுத்தறிவன்(எ)பழனிச்சாமி தலைமை வகித்தாா்.
மாநில பொருளாளா் சு.தம்பிதுரை, அமைப்பாளா் க.பேரறிவாளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திட்டச் செயலா் அ.செல்வராஜ் வரவேற்றாா்.
தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாநில பொதுச் செயலா் கு.கா.பாவலன் பங்கேற்று கொடியேற்றி கல்வெட்டினை திறந்து வைத்தாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டச் செயலா்கள் இரா.மதியழகன், கு.அறிவுக்கரசு, இல.சிலம்பன், மகளிா் விடுதலை இயக்க மாவட்டச் செயலா்கள் எலிசபெத்ராணி, சக்தி, பாக்கியவதி, மண்டல பொறுப்பாளா்கள் எம்.அன்புரோஸ், இரா.கணேசன் பங்கேற்றுப் பேசினா்.
திட்ட துணைத் தலைா்கள், துணைச் செயலா்கள், திட்ட செயற்குழு உறுப்பினா்கள், கோட்ட பொறுப்பாளா்கள், ஒப்பந்த தொழிலாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். திட்ட துணைத் தலைவா் எஸ்.தண்டபானி நன்றி கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...