புதுவை பிரதேச காங்கிரஸ் மீனவர் அணி பொதுச் செயலராக மதியழகன் நியமிக்கப்பட்டார்.
புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவரும், பொதுப் பணித் துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் பரிந்துரையின் பேரில், காரைக்காலைச் சேர்ந்த மதியழகனை மாநில மீனவர் அணி பொதுச் செயலாளராக, கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி நியமித்தார்.
இதையடுத்து, அவர் அமைச்சர் நமச்சிவாயத்தை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் ஆறுமுகம், போத்ராஜ், காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் மாணிக்கம், செல்வராஜ், நெடுங்காடு தொகுதி தலைவர் பாலச்சந்திரன், காங்கிரஸ் பிரமுகர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 9 - நேரலை!

மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்- ஒடுகத்தூரில் வினோத நிகழ்வு

செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்

மகாராஷ்டிரத்தில் நில அதிர்வுகள்: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


