இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்: புதுவை முதல்வர் பேரவையில் அறிவிப்பு

புதுச்சேரியில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

News image
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
Updated On :23 ஜூலை 2020, 11:39 am

DIN

புதுவையில் கரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு  ரூ.1 லட்சம் கரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று புதுவைப் பேரவையில் முதல்வர் வே.நாராயணசாமி அறிவித்தார்.

புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  திங்கள்கிழமை ரூ. 9,000 கோடிக்கு பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். 

இந்நிலையில்,  நான்காவது நாள் கூட்டத்தில் கரோனா பரவல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சிறப்பு விவாதம் பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.

பேரவையில் கரோனா பரவல் குறித்து ஆளும் காங்கிரஸ்,  திமுக கட்சிகள்,  என்.ஆர்.காங்கிரஸ்,  அதிமுக,  நியமன பாஜக உறுப்பினர்கள் பேரவையில் விவாதம் செய்தனர்.  இறுதியாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்வர் நாராயணசாமி பதில் அளித்து பேசும்போது,

புதுவையில்  ஒரே நாளில் 123 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,420 ஆக உயர்ந்துள்ளது.  கரோனா தொற்று காரணமாக புதுவையில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா நிவாரண நிதியாக பொது நிவாரண நிதிக்கு ரூ.9.16 கோடி வந்துள்ளது. கரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் உள்ள இல்லங்கள் அனைத்துக்கும் ரூ. 700  மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும்.

கரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். கரோனா நிவாரணமாக அனைத்து குடும்பத்தினருக்கும் ஏற்கெனவே ரூ. 2,000 வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஜிஎஸ்டி நிதியாக ரூ. 490 கோடி தர வேண்டியுள்ளது.  மேலும்,  கரோனா நிதியாக ஒரு ரூபாய் கூட இதுவரை தரவில்லை.

மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி தொகை வந்தவுடன் அனைத்து குடும்பத்துக்கும் கூடுதல் நிவாரணத்தொகை வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.