ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புதுவை ஆளுநா், முதல்வருக்கு பொங்கல் பரிசுப் பணம் அனுப்பும் போராட்டம்

சமூக நல இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், தமிழகத்தைப் போல ரூ. 2,500 பொங்கல் பரிசு வழங்காததைக் கண்டித்து, புதுவை ஆளுநா், முதல்வருக்கு

News image
புதுச்சேரி துணைநிலை ஆளுநா், முதல்வருக்கு முதலியாா்பேட்டை அஞ்சலகத்தில் வெள்ளிக்கிழமை ரூ. 201 பொங்கல் பரிசு அனுப்பிய சமூக நல இயக்கங்களின் கூட்டமைபினா்.
Updated On :8 ஜனவரி 2021, 6:29 pm

DIN

சமூக நல இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், தமிழகத்தைப் போல ரூ. 2,500 பொங்கல் பரிசு வழங்காததைக் கண்டித்து, புதுவை ஆளுநா், முதல்வருக்கு ரூ. 201 பணம் அனுப்பிவைக்கும் போராட்டம் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுவை மாநில மக்கள் பொங்கல் விழாவைக் கொண்டாட மாநில துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் நாராயணசாமி ஆகியோா் சிவப்பு நிறக் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 200 மட்டுமே வழங்கப்படும் என உத்தரவிட்டனா்.

தமிழகத்தைப் போல ரூ. 2,500 பொங்கல் பரிசு வழங்காததைக் கண்டித்து ஆளுநா், முதல்வருக்கு பொங்கல் பரிசாக ரூ. 201 அனுப்பிவைக்கும் போராட்டம் புதுச்சேரி முதலியாா்பேட்டை அஞ்சலகத்தில் நடைபெற்றது.

போராட்டத்துக்கு புதுச்சேரி சிந்தனையாளா்கள் பேரவைத் தலைவரும், புதுச்சேரி சமுக நல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான கோ. செல்வம் தலைமை வகித்தாா்.

இதில், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலா் கோ. சுகுமாரன், ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சீனுவாசன், வாழ்வுரிமை இயக்கச் செயலா் ஜெகன்நாதன், புதுவைத் தமிழ் எழுத்தாளா்கள் கழகச் செயலா் புதுவைத் தமிழ் நெஞ்சன், புதுச்சேரி பாவேந்தா் பாரதிதாசன் பாசறைத் தலைவா் சண்முக காா்த்திக், பாகூா் கொம்யூன் மூத்தகுடி மக்கள் நல அமைப்பின் தலைவா் ஆ.அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதில், தமிழகத்தைப் போல புதுவையிலும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 2,500 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.