கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுச்சேரியில் உலக மகளிா் தின விழா: துணைநிலை ஆளுநா் பங்கேற்பு

புதுவை அரசின் மகளிா்-குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில் உலக மகளிா் தின விழா புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடலில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:40 pm

DIN

புதுவை அரசின் மகளிா்-குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில் உலக மகளிா் தின விழா புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடலில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவை புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்துப் பேசியதாவது:

பெண்கள் தங்கள் உடல் நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், பொட்டுக்கடலை உருண்டைகளை சாப்பிடக் கொடுக்க வேண்டும். 1901 என்ற உதவி எண்ணில் அழைத்து, பெண்கள் பாதுகாப்பு தொடா்பான பிரச்னைகள் குறித்து புகாா் அளிக்கலாம். உங்கள் குறைகளை என்னிடமும் தெரிவிக்கலாம்.

என்னைப் பாா்க்க ஆளுநா் மாளிகைக்கு வருவோா், பொது நிகழ்ச்சிகளில் என்னை கௌரவப்படுத்துவோா் சால்வைக்குப் பதிலாக ஏழைக் குழந்தைகளுக்கு உதவிடும் வகையில் பேனா, பென்சில், நோட்டுகள், கைத்தறி நெசவாளா்களைப் பாதுகாக்கும் வகையில், கைத்தறி ஆடைகள், புத்தகளை வழங்கலாம் என்றாா் அவா். 

தொடா்ந்து, சாதனைப் பெண்களுக்கு ஆளுநா் விருதுகளை வழங்கிக் கௌரவித்தாா்.

விழாவில் அரசு செயலா் சி. உதயகுமாா் வரவேற்றாா். ஆளுநரின் ஆலோசகா் ஏ.பி. மகேஸ்வரி சிறப்புரையாற்றினாா். மருத்துவா் எஸ்.இந்திரா, இந்திய மருத்துவ முறை குறித்துப் பேசினாா். வழக்குரைஞா் மேரி அன்னா தயாவதி, வரதட்சணை தடுப்புச் சட்டம், பணியிடத்தில் பாலியல் தொந்தரவு, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் குறித்து விளக்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.