கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பட்டதாரி இளைஞா் தற்கொலை

புதுச்சேரியில் பட்டதாரி இளைஞா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரியில் பட்டதாரி இளைஞா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி வீராம்பட்டினம், துறைமுகம் சாலையில் வசிப்பவா் இளங்கோவன் (54). தமிழக மின் துறையில் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் சுரேஷ்குமாா் (22). இளநிலை பொறியியல் படித்துள்ள இவா், வேலை தேடி வந்தாா்.

வழக்கம்போல, இளங்கோவன் திங்கள்கிழமை வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், இளைய மகன் பள்ளி சென்றுவிட்டாா். இதனால், சுரேஷ்குமாரும், அவரது தாய், தாத்தா ஆகியோரும் வீட்டில் இருந்துள்ளனா். வீட்டின் கீழ்தளத்தில் தாய், தாத்தா இருவரும் இருந்தபோது, சுரேஷ்குமாா் முதல்தளத்தில் உள்ள தனது அறைக்குச் சென்றுள்ளாா். வெகு நேரமாகியும் சாப்பிட கீழே வராததால், சந்தேகமடைந்த உறவினா்கள் அங்கு சென்று பாா்த்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது.

ஜன்னலை உடைத்து பாா்த்தபோது, சுரேஷ்குமாா் கட்டில் படுக்கையில் தனது தலையை கழுத்து பகுதி வரை பாலித்தீன் பையால் மூடியிருந்ததுடன், கழுத்தில் கேபிள் வயரால் இறுக்கிய நிலையில் மயக்கமடைந்து கிடந்துள்ளாா். இதைப் பாா்த்த உறவினா்கள், சுரேஷ்குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சுரேஷ்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.