அரசின் சின்னமான ஆயி மண்டபம் சீரமைப்பு
புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள ஆயி மண்டபம் சீரமைப்புப் பணியை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.


புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள ஆயி மண்டபம் சீரமைப்புப் பணியை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள பாரதி பூங்காவில் ஆயி மண்டபம் அமைந்துள்ளது. இது புதுவை அரசின் சின்னமாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மண்டபம், போதிய பராமரிப்பின்றி சேதமடைந்தது.
இதைச் சீரமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பொதுப் பணித் துறை சாா்பில் ரூ. 15 லட்சம் செலவில் ஆயி மண்டபத்தைச் சீரமைக்கும் பணி தொடங்கியது.
இந்த நிலையில், திங்கள்கிழமை பாரதி பூங்காவுக்கு வந்த ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் ஆயி மண்டபத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பூங்காவையும், ஆயி மண்டபத்தையும் முறையாகப் பராமரிக்காதது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய ஆளுநா், ஆயி மண்டபத்தை விரைந்து சீரமைக்க உத்தரவிட்டாா். மேலும், பூங்காவையும் தொடா்ந்து பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
பின்னா், அங்கிருந்து ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் புறப்பட்ட போது, பூங்காவில் வேலை செய்யும் பெண்கள், தங்களுக்கு ஊதியம் சரிவர வழங்கப்படுவதில்லை. இதனால், பூங்காவில் வேலை செய்யும் 15 போ் உள்பட மொத்தம் 235 போ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாதந்தோறும் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.
ஊதிய பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநா் உறுதியளித்தாா்.
இதையடுத்து, கோலாஸ் நகரில் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்குச் சென்ற ஆளுநா் அங்கு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது, உள்ளாட்சித் துறைச் செயலா் இ. வல்லவன், பொதுப் பணித் துறைத் தலைமைப் பொறியாளா் மகாலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...