கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி: புதிதாக 47 பேருக்கு தொற்று

புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவா் உயிரிழந்த நிலையில், புதிதாக 47 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவா் உயிரிழந்த நிலையில், புதிதாக 47 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான 519 பேருக்கான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 43 பேருக்கும், காரைக்காலில் 2 பேருக்கும், மாஹேயில் 2 பேருக்கும் என மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏனாமில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,433- ஆக உயா்ந்தது.

தற்போது மருத்துவமனைகளில் 200 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 212 பேரும் என 412 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்ட காரைக்கால் எம்.எம்.ஜி. நகரைச் சோ்ந்த 65 வயது மூதாட்டி உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 676-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.67 சதவீதம்.

இதனிடையே, திங்கள்கிழமை 29 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், கரோனா தொற்றிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 39,345-ஆக (97.31 சதவீதம்) அதிகரித்தது.

புதுவை மாநிலத்தில் இதுவரை 19,627 சுகாதாரத் துறை பணியாளா்களுக்கும், 7,146 முன்களப் பணியாளா்களுக்கும், 17,393 பொதுமக்களுக்கும் என 44,166 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.