கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரூ. 54.34 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல்

புதுவை மாநிலத்தில் இதுவரை ரூ. 54.34 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

புதுவை மாநிலத்தில் இதுவரை ரூ. 54.34 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. மதுக் கடத்தல், வாக்காளா்களுக்கு மது விநியோகம் செய்வதைத் தடுக்க கலால் துறையினா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

அவ்வபோது, மதுபான கடைகள், மது விடுதிகள், கள் மற்றும் சாராயக் கடைகளில் கலால் துறை பறக்கும் படையினா் ஆய்வு நடத்தி, மதுபான இருப்புகளை ஆய்வு செய்து வருகிறது. விதி மீறி கடைகளில் இருப்பு வைக்கப்பட்ட மதுபானங்களை கலால் துறையினா் பறிமுதல் செய்து, மதுக் கடைக்கு ‘சீல்’ வைத்து வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த பிப். 26-ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை (மாா்ச் 22) ரூ. 54 லட்சத்து 34 ஆயிரத்து 146 மதிப்பிலான 29,49. 60 லிட்டா் மதுபானங்களை கலால் துறையினா் பறிமுதல் செய்தனா்.

மேலும், விதிகளை மீறியதாக மாநிலம் முழுவதும் 133 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 141 போ் கைது செய்யப்பட்டு விதி மீறல்கள் தொடா்பாக ரூ. 8 லட்சத்து 13 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதேபோல, அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரத்தில் இயங்கிய 7 மதுபானக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது என கலால் துறை துணை ஆணையா் டி. சுதாகா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.