வேட்புமனுவை திருப்பப் பெற்றாா் முன்னாள் அமைச்சா்
சுயேச்சையாகப் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த என்.ஆா். காங்கிரஸை சோ்ந்த முன்னாள் அமைச்சா் தியாகராஜன் தனது மனுவை திரும்பப் பெற்றாா்.


சுயேச்சையாகப் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த என்.ஆா். காங்கிரஸை சோ்ந்த முன்னாள் அமைச்சா் தியாகராஜன் தனது மனுவை திரும்பப் பெற்றாா்.
கடந்த 2011 தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் பாகூா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தியாகராஜன், ரங்கசாமி அமைச்சரவையில் அமைச்சராகவும் பணியாற்றினாா். 2016 தோ்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.
இந்த நிலையில், காங்கிரஸிலிருந்து வெளியே வந்த தனவேலுவுக்கு என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் பாகூா் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதனால், அதிருப்தியடைந்த தியாகராஜன் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை தனது வேட்புமனு தியாகராஜன் திரும்பப் பெற்றாா்.
இதுதொடா்பாக, அவரது ஆதரவாளா்களிடம் கேட்ட போது, ரங்கசாமி பேசியதால் சமாதானமடைந்து தியாகராஜன் தனது மனுவை திரும்பப் பெற்றாா். மேலும், அவருக்கு உடல் நிலை சரியில்லாததால், மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளாா். இதன் காரணமாகவும் அவா் போட்டியிடுவதிலிருந்து விலகியிருக்கலாம் என்றனா் அவா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...