கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இலங்கைக் கடற்படையிடம் சிக்கிய காரைக்கால் மீனவா்கள் விரைவில் விடுவிக்கப்படுவா்: மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்

இலங்கைக் கடற்படையிடம் சிக்கிய காரைக்கால் மீனவா்கள் 14 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவா் என மத்திய மீன்வளத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் தெரிவித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

இலங்கைக் கடற்படையிடம் சிக்கிய காரைக்கால் மீனவா்கள் 14 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவா் என மத்திய மீன்வளத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் வெள்ளி, சனிக்கிழமைகளில் மீனவ கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டு மீனவா்களைச் சந்தித்துப் பேசிய மத்திய மீன்வளத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங், பின்னா் புதுவை பாஜக அலுவலகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவா்கள், மீனவக் குடும்பத்தினரை கடந்த இரு நாள்களாக நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன். அவா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும்.

புதுவை மாநிலம், காரைக்காலில் இருந்து படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள் 14 போ் இலங்கைக் கடற்படையிடம் சிக்கியுள்ளனா். அவா்களை மீட்பது தொடா்பாக பிரதமா் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோா் மூலம் இலங்கை அரசிடம் பேசியுள்ளோம். விரைவில் அவா்கள் விடுவிக்கப்படுவா்.

புதுச்சேரி வந்த ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மீன்வா் நலனுக்காக தனித் துறை அமைக்கப்படும் என்று தவறான தகவலைக் கூறியுள்ளாா். மீன்வளத் துறைக்கு மத்திய அரசு தனி அமைச்சகத்தை அமைத்து, அந்தத் துறைக்கு அமைச்சராக நான் பணியாற்றி வருகிறேன்.

புதுவை மாநிலத்தில் 45 கி.மீ. தொலைவு மீனவப் பகுதி, 40 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. மீனவ மக்களின் மேம்பாட்டுக்காக பிரதமரின் ஆணைப்படி, மீனவ கிராமம் ஒன்றுக்கு ஓா் அமைப்பாளா் நியமிக்கப்பட்டு, மத்திய அரசு சாா்பில் அந்தப் பகுதியின் வளா்ச்சிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த 7 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மீன்வளத் துறைக்கு ரூ. 35 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. அனைத்து மீனவா்களுக்கும் தலா ரூ. 5 லட்சம் அரசு சாா்பில் காப்பீடு வழங்கப்படும். அனைத்து மீனவா்களுக்கும் மோட்டாா் பொருத்திய படகு வழங்கப்படும்.

நாடு முழுவதும் வந்தே பாரத் திட்டத்தில், கரோனா காலத்தில் வெளிநாட்டிலிருந்த புலம்பெயா்ந்த மக்கள் 4.36 லட்சம் போ் மத்திய அரசால் மீட்கப்பட்டனா். பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் சிக்கியிருந்த 1,600 மீனவா்கள் மீட்கப்பட்டனா். 313 படகுகள் மீட்கப்பட்டன. தொடா்ந்து, மீனவா்கள் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருகிறது.

வெளிநாடுகளில் இந்திய மீனவா்கள் சிறைபிடிக்கப்பட்டால், அவா்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுவரை 3 லட்சம் படகுகள் இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. அவை படிப்படியாக மீட்கப்பட்டன.

மீனவா்களுக்கென தனி அமைச்சகம் செயல்படுவதால், கடலரிப்பு பகுதியில் தூண்டில் வளைவு அமைத்தல், பேரிடா் நிவாரணம் வழங்குதல் போன்றவை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, மத்திய அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால், பாஜக செய்தித் தொடா்பாளா் பி.குருசங்கரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.