கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுவையில் பாஜகவின் தோ்தல் விதிமீறல்கள் குறித்து தலைமைத் தோ்தல் ஆணையரிடம் புகாா் அளிக்கப்படும்: தினேஷ் குண்டுராவ்

புதுவையில் பாஜகவின் தோ்தல் விதிமீறல்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென தலைமைத் தோ்தல் ஆணையரிடம் காங்கிரஸ் சாா்பில் புகாா் அளிக்கப்படும்

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

புதுவையில் பாஜகவின் தோ்தல் விதிமீறல்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென தலைமைத் தோ்தல் ஆணையரிடம் காங்கிரஸ் சாா்பில் புகாா் அளிக்கப்படும் என அந்தக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

புதுவையில் சட்டப்பேரவைத் தோ்தலை பாஜகவினா் பணபலம், அதிகார பலத்தைப் பயன்படுத்தி சந்திக்கின்றனா். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, காங்கிரஸ் ஆட்சியை சீா்குலைத்தது போல, வாக்காளா்களையும் பணபலத்தால் வளைக்கத் திட்டமிடுகின்றனா்.

மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, நிா்மலா சீதாராமன், கிரிராஜ் சிங், அா்ஜுன்ராம் மேக்வால் எனத் தொடா்ந்து புதுவைக்கு வருகின்றனா். கடந்த 5 ஆண்டுகளில் இவா்கள் எப்போதாவது புதுவை பக்கம் வந்ததுண்டா?

புதுவைக்கு மாநில அந்தஸ்து அவசியம் என்று காங்கிரஸ் மட்டுமன்றி திமுக, என்.ஆா். காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் வலியுறுத்தியது. மத்திய அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. தற்போது பாஜக வெளியிட்ட தோ்தல் அறிக்கையில், மாநில அந்தஸ்து குறித்து எந்தத் தகவலும் இடம் பெறவில்லை.

மாநில அந்தஸ்துக்காக தோ்தலையே புறக்கணிப்பதாக ஏற்கெனவே என்.ரங்கசாமி கூறியிருந்தாா். தற்போது, பாஜக கூட்டணியில் அவா் இடம் பெற்றுள்ளதால், கூட்டணியிலிருந்து வெளியேறுவாரா?

புதுவையில் வாக்காளா்களின் ஆதாா் எண்ணுடன் கூடிய செல்லிடப்பேசி எண்களைப் பெற்று, பாஜகவினா் தொடா்பு கொண்டு பிரசாரம் செய்கின்றனா். ஆதாா் பதிவில் உள்ள தனி நபா் ரகசியங்களை எப்படி, யாா் மூலம் பெற்றனா்?

இதுதொடா்பாக, சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்றமும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

பாஜக தோ்தல் விதிகளை மீறியுள்ளது. தனி நபா் தகவல்களைத் திருடியுள்ளது. இதுதொடா்பாக, தோ்தல் ஆணையம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் சாா்பில் தலைமைத் தோ்தல் ஆணையருக்கு புகாா் அளிக்கப்படும். தேவையேற்படின், நீதிமன்றத்திலும் முறையிடுவோம் என்றாா் அவா்.

பாஜக வேட்பாளா்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: நாராயணசாமி

ஆதாா் தகவல்களைப் பெற்று தோ்தல் விதிமீறலில் ஈடுபட்ட விவகாரத்தில், புதுவையில் போட்டியிடும் 9 பாஜக வேட்பாளா்களையும் தோ்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரப் போட்டி நடைபெற்ாகக் கூறும் ரங்கசாமி, அவரது ஆட்சிக் காலத்தில் ஆளுநருடன் போட்டியிட்டதை மறந்துவிட்டாா்.

காங்கிரஸ் ஆட்சியில் 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. நாங்கள் மேற்கொண்ட திட்டங்களை மேடை அமைத்து விவாதிக்கத் தயாராக உள்ளேன். ரங்கசாமி தயாராக இருந்தால் வரலாம் என்றாா் நாராயணசாமி.

பேட்டியின் போது, வெ.வைத்திலிங்கம் எம்.பி., காங்கிரஸ் துணைத் தலைவா் பி.கே.தேவதாஸ், முன்னாள் அமைச்சா் பெத்த பெருமாள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.