விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுவை அரசு ஊழியா்கள் ஊதியம் பெற கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்: துணைநிலை ஆளுநா் தமிழிசை

புதுவையில் அரசு ஊழியா்கள் ஊதியம் பெற கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை தெரிவித்தாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

புதுவையில் அரசு ஊழியா்கள் ஊதியம் பெற கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை தெரிவித்தாா்.

சுதந்திர தின 75-ஆவது ஆண்டு விழாவையொட்டி, தஞ்சாவூரில் தொடங்கிய இந்திய விமானப் படை வீரா்களின் கிழக்குக் கடலோர விழிப்புணா்வு மிதிவண்டிப் பயணம், புதுச்சேரி வழியாக வியாழக்கிழமை சென்றது. புதுவை ஆளுநா் மாளிகையிலிருந்து இந்தப் பயணத்தை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதுவையில் அக்டோபா் 2-ஆம் தேதிக்குள் முழுமையாக தடுப்பூசி செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தொகுதிகள் தோறும் மருத்துவக் குழுவை நியமித்துள்ளோம். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் விடுப்பட்டவா்களைக் கணக்கெடுத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுவையில் அரசு ஊழியா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவுறுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லையெனில், ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்காது.

அரசின் சலுகைகள், தீபாவளிக்கு அரசு அறிவிக்கும் சலுகைகளைப் பெற பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் இல்லையெனில், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 35 சதவீதம் போ் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.