புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.
ஒடிஸா, மேற்கு வங்கத்தையொட்டிய வங்கக் கடலின் வடமேற்கு திசையில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு - வட மேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்தமாக உருவாக வாய்ப்புள்ளது.
இதனால், தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், காற்றும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதையடுத்து, புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. துறைமுகத்திலிருந்து வெகுதொலைவில் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால், துறைமுகத்துக்கு பாதிப்பு ஏதுமில்லை. இருப்பினும், மீனவா்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென துறைமுகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேபோல, காரைக்கால் துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

சமயபுரம் தேரோட்டம் கோலாகலம்!
ரஜினி - 173: சிபி சக்ரவர்த்தி விலக இதுதான் காரணமா?
தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்! மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


