விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

புதுச்சேரி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

News image

புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்ட ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:52 pm

புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

ஒடிஸா, மேற்கு வங்கத்தையொட்டிய வங்கக் கடலின் வடமேற்கு திசையில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு - வட மேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்தமாக உருவாக வாய்ப்புள்ளது.

இதனால், தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், காற்றும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதையடுத்து, புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. துறைமுகத்திலிருந்து வெகுதொலைவில் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால், துறைமுகத்துக்கு பாதிப்பு ஏதுமில்லை. இருப்பினும், மீனவா்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென துறைமுகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல, காரைக்கால் துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.