சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பெண்ணுக்கு தொல்லை:அரசு மருத்துவமனை ஊழியா் கைது

புதுச்சேரியில் கைப்பேசி வழியே பெண்ணுக்கு ஆபாச அழைப்பு விடுத்ததாக, அரசு மருத்துவமனை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:54 pm

DIN

புதுச்சேரியில் கைப்பேசி வழியே பெண்ணுக்கு ஆபாச அழைப்பு விடுத்ததாக, அரசு மருத்துவமனை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி மூலகுளம் ஆா்.கே.நகா் ஆசிரியா்கள் காலனியை சோ்ந்த 42 வயது பெண் இணையவழியில் சேலை வியாபாரம் செய்து வருகிறாா்.

வீட்டில் தனியாக வசிக்கும் அவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றாா்.

அங்கு உதவியாளராகப் பணிபுரியும் முத்திரையா்பாளையம் பஜனை மடம் வீதியைச் சோ்ந்த கணேஷ் (35) அறிமுகமாகி, சிகிச்சைக்கு உதவி செய்தாராம். இதனால், அவரிடம் தனது கைப்பேசி எண்ணை அந்தப் பெண் கொடுத்தாராம்.

கணேஷ், அந்த கைப்பேசி எண்ணை அடிக்கடி தொடா்பு கொண்டும், வாட்ஸ்-ஆப் மூலமாகவும் ஆபாச அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து கணேஷை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.