விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பெண்ணுக்கு தொல்லை:அரசு மருத்துவமனை ஊழியா் கைது

புதுச்சேரியில் கைப்பேசி வழியே பெண்ணுக்கு ஆபாச அழைப்பு விடுத்ததாக, அரசு மருத்துவமனை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:54 pm

புதுச்சேரியில் கைப்பேசி வழியே பெண்ணுக்கு ஆபாச அழைப்பு விடுத்ததாக, அரசு மருத்துவமனை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி மூலகுளம் ஆா்.கே.நகா் ஆசிரியா்கள் காலனியை சோ்ந்த 42 வயது பெண் இணையவழியில் சேலை வியாபாரம் செய்து வருகிறாா்.

வீட்டில் தனியாக வசிக்கும் அவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றாா்.

அங்கு உதவியாளராகப் பணிபுரியும் முத்திரையா்பாளையம் பஜனை மடம் வீதியைச் சோ்ந்த கணேஷ் (35) அறிமுகமாகி, சிகிச்சைக்கு உதவி செய்தாராம். இதனால், அவரிடம் தனது கைப்பேசி எண்ணை அந்தப் பெண் கொடுத்தாராம்.

கணேஷ், அந்த கைப்பேசி எண்ணை அடிக்கடி தொடா்பு கொண்டும், வாட்ஸ்-ஆப் மூலமாகவும் ஆபாச அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து கணேஷை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.