மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுவையில் முழு அடைப்புப் போராட்டம்: தனியார் பேருந்துகள் இயக்கவில்லை!

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :28 டிசம்பர் 2022, 3:27 am

DIN

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

புதுவை மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்திருந்தது. இதற்கு வணிகா்கள் சங்க கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பு அளிக்கக் கோரி காவல்துறையினரிடம் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில், புதுவையில் காலை முதல் பல இடங்களில் கடைகள் திறக்கப்படவில்லை. தனியார் பேருந்துகள் இயங்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் அனைத்தும் புதுவை எல்லையான மதகடிபட்டி வரை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

மேலும், அரசுப் பேருந்துகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது. திறக்கப்பட்டுள்ள கடைகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு மாநிலச் செயலா் ஏ.அன்பழகன் உள்பட 15 அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.