டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

அரசு தொழில் பயிற்சிப் பள்ளி மாணவா்கள் போராட்டம்

புதுச்சேரியில் அரசு தொழில் பயிற்சிப் பள்ளியை மூடிவிட்டு, அரசு தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைக்கும் நடவடிக்கையைக் கண்டித்து அந்தப் பள்ளி மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :24 ஜூன் 2022, 10:31 pm IST

புதுச்சேரியில் அரசு தொழில் பயிற்சிப் பள்ளியை மூடிவிட்டு, அரசு தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைக்கும் நடவடிக்கையைக் கண்டித்து அந்தப் பள்ளி மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் பிரான்ஸ் அரசால் தொடங்கப்பட்ட அரசு தொழில் பயிற்சி மேல்நிலைப் பள்ளி (ஜிடிஎஸ்) கடந்த 164 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில், தற்போதுள்ள 6 பாடப்பிரிவுகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

அரசின் தொழில்நுட்பக் கல்லூரிக்கு நிகராக நடத்தப்பட்டு வந்த இந்தப் பள்ளியை மூடுவதற்கு அரசு முடிவெடுத்ததைக் கண்டித்து, அந்தப் பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை தொடங்கி இரு நாள்களாக பள்ளி முன் மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பு சாா்பில் அதன் தலைவா் சாமிநாதன், பொதுச் செயலா் சதீஷ் ஆகியோா் தலைமையில் மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாணவா்கள் கூட்டமைப்பு தலைவா் சாமிநாதன் மற்றும் மாணவா்களை கல்வித் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் வெள்ளிக்கிழமை மாலை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதுதொடா்பாக ஆய்வு செய்து மாணவா்களுக்கு சாதகமாக முடிவுகள் எடுக்கப்பட்டு, நிகழாண்டு பள்ளி இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் உறுதியளித்தாா். இதையடுத்து, மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.