மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மின்தடையால் காரைக்காலில் பிஎஸ்என்எல் இணைப்பு துண்டிப்பு

காரைக்காலில் பரவலாக  மின் துண்டிப்பு பிரச்னை எழுந்துள்ள  நிலையில், பிஎஸ்என்எல் தொலைதொடர்பு இணைப்பும் வியாழக்கிழமை  துண்டிக்கப்பட்டது.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 1:16 pm IST

காரைக்கால்: புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்கும் வகையில் ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டதால், மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர். காரைக்காலில் பரவலாக  மின் துண்டிப்பு பிரச்னை எழுந்துள்ள  நிலையில், பிஎஸ்என்எல் தொலைதொடர்பு இணைப்பும் வியாழக்கிழமை  துண்டிக்கப்பட்டது.

யூனியன் பிரதேசங்களில் மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவையொட்டி தனியார் மயத்திற்கான ஒப்பந்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை மாலை வெளியிடப்பட்டது. 

மின்துறை தனியார் மயமாவது உறுதியான நிலையில்,  மின் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்திற்கு அழைப்புவிடுத்து, புதன்கிழமை முதல் போராட்டத்தை தொடங்கினர்.

காரைக்கால் மாவட்டத்தில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டதால்,  அதனை சீர் செய்ய ஊழியர்கள் முன்வராத நிலையில் ஆங்காங்கே மக்கள் சாலை  மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். சில பகுதிகளில் சீரமைப்பு செய்து மின்சாரம் வழங்கப்பட்டது. 

போராட்டம் நீடித்துவரும்  நிலையில், வியாழக்கிழமை காரைக்கால்  கடற்கரை சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தில்  மின் இணைப்பு   துண்டிக்கப்பட்டது. இதனால் மின்னணு இணைப்பகத்தின் பணி முடங்கியது.

காரைக்கால் நகரப் பகுதியில்  உள்ள பி.எஸ்.என்.எல் தரைவழி தொலைபேசி மற்றும் மோடம் வழி இணையத் தொடர்பு சேவை பாதித்தது.  இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,  மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இணைப்பகத்தின் பணிகள்  முடங்கின. 

மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் இணைப்புகள் உள்ளன. நகரப் பகுதியில் 2 ஆயிரம் இணைப்பு சேவை முடங்கிவிட்டது. மாலை வரை இதே நிலை நீடித்தால் மாவட்டத்தின் அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுவிடும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.