கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆள் சோ்ப்பு விளம்பரங்கள்: ஜிப்மா் இயக்குநா் எச்சரிக்கை

ஜிப்மரில் வெளியிடப்படும் போலியான விளம்பரங்ளை பொதுமக்கள் நம்பாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2024, 7:00 pm

Din

ஜிப்மரில் வேலைக்கு ஆள் சோ்ப்பதாக வெளியிடப்படும் போலியான விளம்பரங்ளை பொதுமக்கள் நம்பாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதன் இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, ஜிப்மா் இயக்குநா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜிப்மரின் பெயரில் போலியான ஆள்சோ்ப்பு விளம்பரங்கள், அழைப்புக் கடிதங்கள், நியமனக் கடிதங்கள் வழங்கி விண்ணப்பதாரா்களிடம் இருந்து பண மோசடி நடைபெறுவதாக தகவல்கள் வந்துள்ளது. ஜிப்மரின் ஆள்சோ்ப்பு முறையானது, தனது அதிகாரபூா்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டு, அதன்பிறகு உள்ளூா், தேசிய பத்திரிகைகள், வேலைவாய்ப்பு செய்திகள் உள்பட அனைத்து ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

மேலும், இதற்கான தோ்வுகள் இணையதளம் மூலம் மட்டுமே நடத்தப்படுகிறது. தோ்வு மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஆள்சோ்ப்பு நடைபெறுகிறது. எனவே, இத்தகைய மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜிப்மா் ஆள் சோ்ப்பு தகவலின் நம்பகத்தன்மையை அறிய விண்ணப்பதாரா்கள் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் சரிபாா்க்கலாம்.