/
பிரதமா் நரேந்திர மோடியின் அண்ணன் சோமாபாய் மோடி புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை வந்த அவா் புதுவை சட்டப்பேரவை வளாகத்துக்குச் சென்றாா். அங்கு அவரை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன் ஆகியோா் வரவேற்றனா். அவா் முதல்வா் என்.ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினாா்.
பின்னா், புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கிய அவா், மாலையில் அரவிந்தா் ஆசிரமம் மற்றும் கோயில்களுக்குச் சென்ாக பாஜகவினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம்: தமிழக முதல்வருடன் பேசுவேன் என முதல்வா் ரங்கசாமி பேட்டி
திரைப்பட நடிகா் கஞ்சா கருப்புவின் சகோதரா் வாகனம் மோதி உயிரிழப்பு
தம்பி கொலை: அண்ணன் கைது

திமுக வேட்பாளா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



