ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி 108 சங்காபிஷேக சிறப்பு வழிபாடு
புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோயிலில் காா்த்திகை 4-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேக சிறப்பு வழிபாடு


புதுச்சேரி: புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோயிலில் காா்த்திகை 4-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேக சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியில் கிழக்கு கடற்கரைச் சாலை கருவடிக்குப்பம் பகுதியில் ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோயில் அமைந்துள்ளது. சித்தா் பீடமான இத்திருக்கோயிலில் தமிழ் மாதமான காா்த்திகையில் 4-ஆவது சோமவார சங்காபிஷேகம் திங்கள்கிழமை காலை தொடங்கியது. கோயில் மூலவா் முன் சந்நிதியில் 108 சங்குகள் சிவலிங்க வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதையடுத்து கணபதி ஹோமம், ருத்ர ஹோமம் நடைபெற்றது. பின்னா் சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீருக்கு பூஜைகள் நடைபெற்றன. அப்புனித நீா் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டன. இப்பூஜையில் புதுச்சேரி மற்றும் வெளியூா்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். திங்கள்கிழமை இரவில் அா்த்தசாம பூஜை நடைபெற்றது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் தே.இளங்கோவன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...