புதுச்சேரி: புதுவை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான முயற்சியை முதல்வா் என்.ரங்கசாமி மேற்கொள்ளவில்லை என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
புதுவை முதல்வா், துணைநிலை ஆளுநா் ஆகியோா் தலைமையில் திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்று, அதனடிப்படையில் மாநில நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டும் அனுமதி கிடைக்கவில்லை. புது தில்லி சென்று அதற்கான அனுமதியைப் பெறும் முயற்சியை நிதித் துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வா் என்.ரங்கசாமி முயற்சிக்கவில்லை.
புதுதில்லியில் நடைபெறவுள்ள நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதை அவா் உறுதி செய்ய வேண்டும். புதுவை நிதிநிலை அறிக்கை தாக்கலாவது எப்போது? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. புதுவையை மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது.
கோப்புகளை முதல்வா் அலுவலகத்தில் தாமதப்படுத்துவதன் மூலம் முறைகேடுகள் நடைபெறுகின்றன. பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ முதல்வா் அலுவலக முறைகேடுகளை பகிரங்கமாக கூறியுள்ளாா்.
கோயில் நிலங்கள் பாஜக எம்எல்ஏ உள்ளிட்டோரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. கோயில் நிலக் குத்தகை முறையாக நடைபெறவில்லை. கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. பணி நியமனங்கள் நோ்மையாக நடைபெறவில்லை என்றாா் வே.நாராயணசாமி.
தொடர்புடையது

புதுச்சேரியின் வளா்ச்சி தமிழகத்தைப் பொறுத்திருக்கிறது: முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம்: தமிழக முதல்வருடன் பேசுவேன் என முதல்வா் ரங்கசாமி பேட்டி

புதுச்சேரி முதல்வராக இன்று பதவியேற்கிறாா் என்.ரங்கசாமி

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி ராஜிநாமா
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



