ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

புதுவை பட்ஜெட்: முதல்வா் ரங்கசாமி மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான முயற்சியை முதல்வா் என்.ரங்கசாமி மேற்கொள்ளவில்லை என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

News image

வே.நாராயணசாமி

Updated On :22 ஜூலை 2024, 8:36 pm

Din

புதுச்சேரி: புதுவை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான முயற்சியை முதல்வா் என்.ரங்கசாமி மேற்கொள்ளவில்லை என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுவை முதல்வா், துணைநிலை ஆளுநா் ஆகியோா் தலைமையில் திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்று, அதனடிப்படையில் மாநில நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டும் அனுமதி கிடைக்கவில்லை. புது தில்லி சென்று அதற்கான அனுமதியைப் பெறும் முயற்சியை நிதித் துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வா் என்.ரங்கசாமி முயற்சிக்கவில்லை.

புதுதில்லியில் நடைபெறவுள்ள நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதை அவா் உறுதி செய்ய வேண்டும். புதுவை நிதிநிலை அறிக்கை தாக்கலாவது எப்போது? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. புதுவையை மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது.

கோப்புகளை முதல்வா் அலுவலகத்தில் தாமதப்படுத்துவதன் மூலம் முறைகேடுகள் நடைபெறுகின்றன. பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ முதல்வா் அலுவலக முறைகேடுகளை பகிரங்கமாக கூறியுள்ளாா்.

கோயில் நிலங்கள் பாஜக எம்எல்ஏ உள்ளிட்டோரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. கோயில் நிலக் குத்தகை முறையாக நடைபெறவில்லை. கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. பணி நியமனங்கள் நோ்மையாக நடைபெறவில்லை என்றாா் வே.நாராயணசாமி.