ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

புதுச்சேரியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழகம், புதுவையில் போதைப் பொருள் விநியோகம் அதிகரித்திருப்பதை மாநில அரசுகள் தடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தக் கோரி, புதுச்சேரி அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினா்.

Updated On :5 மார்ச் 2024, 2:00 pm IST

புதுச்சேரி: புதுச்சேரியில் போதைப் பொருள் குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம், புதுவையில் போதைப் பொருள் விநியோகம் அதிகரித்திருப்பதை மாநில அரசுகள் தடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அதிமுக மாநில செயலாளா் ஆ.அன்பழகன் பேசியதாவது: தமிழகத்தைப் போலவே புதுவை மாநிலத்திலும் போதைப் பொருள்கள் அதிகளவில் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால், போதைப் பொருள் விற்பனையைத் தடுப்பதில் புதுவை என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடவடிக்கை எடுக்காமலிருப்பது கண்டிக்கத்தக்கது.

ஆகவே, புதுவையில் போா்க்கால அடிப்படையில் போதை பொருள் குற்றங்களை தடுக்கவேண்டியது அவசியம் என்றாா். ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.