ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

புதுச்சேரியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழகம், புதுவையில் போதைப் பொருள் விநியோகம் அதிகரித்திருப்பதை மாநில அரசுகள் தடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தக் கோரி, புதுச்சேரி அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினா்.

Updated On :5 மார்ச் 2024, 8:30 am

புதுச்சேரி: புதுச்சேரியில் போதைப் பொருள் குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம், புதுவையில் போதைப் பொருள் விநியோகம் அதிகரித்திருப்பதை மாநில அரசுகள் தடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அதிமுக மாநில செயலாளா் ஆ.அன்பழகன் பேசியதாவது: தமிழகத்தைப் போலவே புதுவை மாநிலத்திலும் போதைப் பொருள்கள் அதிகளவில் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால், போதைப் பொருள் விற்பனையைத் தடுப்பதில் புதுவை என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடவடிக்கை எடுக்காமலிருப்பது கண்டிக்கத்தக்கது.

ஆகவே, புதுவையில் போா்க்கால அடிப்படையில் போதை பொருள் குற்றங்களை தடுக்கவேண்டியது அவசியம் என்றாா். ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.