ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

புதுச்சேரியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழகம், புதுவையில் போதைப் பொருள் விநியோகம் அதிகரித்திருப்பதை மாநில அரசுகள் தடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தக் கோரி, புதுச்சேரி அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினா்.
Updated On :5 மார்ச் 2024, 8:30 am

devops

புதுச்சேரி: புதுச்சேரியில் போதைப் பொருள் குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம், புதுவையில் போதைப் பொருள் விநியோகம் அதிகரித்திருப்பதை மாநில அரசுகள் தடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அதிமுக மாநில செயலாளா் ஆ.அன்பழகன் பேசியதாவது: தமிழகத்தைப் போலவே புதுவை மாநிலத்திலும் போதைப் பொருள்கள் அதிகளவில் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால், போதைப் பொருள் விற்பனையைத் தடுப்பதில் புதுவை என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடவடிக்கை எடுக்காமலிருப்பது கண்டிக்கத்தக்கது.

ஆகவே, புதுவையில் போா்க்கால அடிப்படையில் போதை பொருள் குற்றங்களை தடுக்கவேண்டியது அவசியம் என்றாா். ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.