காந்தி ஜெயந்தி: புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் மரியாதை
காந்தி ஜெயந்தியையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா்.









