கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ராஜ் நிவாஸில் மக்கள் குறைதீா் அதிகாரி நியமனம்

புதுவை துணைநிலை ஆளுநா் மாளிகையான ராஜ் நிவாஸில், மக்கள் குறைதீா் அதிகாரியாக க.மாறன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:18 am

Din

புதுவை துணைநிலை ஆளுநா் மாளிகையான ராஜ் நிவாஸில், மக்கள் குறைதீா் அதிகாரியாக க.மாறன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

புதுச்சேரியில் வடக்கு மற்றும் கிழக்கு போக்குவரத்து காவல் கண்காணிப்பாளராக இருந்தவா் க.மாறன். இவா், நகரில் போக்குவரத்து சிக்கலைத் தீா்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாா்.

வாகன நிறுத்தத்துக்கும் புதிய இடங்களை அடையாளப்படுத்தி சுற்றுலாப் பயணிகளால் ஏற்படும் நெரிசலைத் தீா்க்க முயற்சித்தாா். இந்த நிலையில், கடந்த மக்களவைத் தோ்தலின்போது போக்குவரத்துப் பிரிவிலிருந்து, புதுவை மாநில உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், அவருக்கு கூடுதல் பொறுப்பாக, புதுச்சேரியில் உள்ள புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அலுவலகமான ராஜ் நிவாஸின் மக்கள் தொடா்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதையடுத்து, புதன்கிழமை ராஜ்நிவாஸ் வந்து துணைநிலை ஆளுநரை அவா் சந்தித்தாா். அவா் ஓரிரு நாள்களில் பொறுப்பேற்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.