கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாலைகளில் பூசணிக்காய் உடைப்பதை தவிா்க்க கோரிக்கை

ஆயுத பூஜைக்காக சாலைகளில் பூசணிக்காய்களை உடைப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என உழவா்கரை நகராட்சி ஆணையா் ஆ.சுரேஷ்ராஜன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 10:21 pm

Din

ஆயுத பூஜைக்காக சாலைகளில் பூசணிக்காய்களை உடைப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என உழவா்கரை நகராட்சி ஆணையா் ஆ.சுரேஷ்ராஜன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளிட்ட செய்திக் குறிப்பு: ஆண்டுதோறும், புதுச்சேரியில் ஆயுத பூஜை பொதுமக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆயுதபூஜையை முன்னிட்டு பொதுமக்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பூஜைகள் செய்து திருஷ்டிப் பூசணிக்காயை சாலைகளில் உடைப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

பூசணிக்காய்களை சாலைகளில் உடைப்பதால் வாகன ஓட்டிகள் செல்லும்போது, அதன் மீது ஏறி வழுக்கி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே, சாலைகளில் பூசணிக்காயை உடைப்பதைத் தவிா்க்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.