கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தீயணைப்பு நிலையம் திறப்பு

புதுச்சேரி அருகே வில்லியனூரில் ஏற்கெனவே இருந்த இடத்திலிருந்து புதிய இடத்துக்கு மாற்றப்பட்ட தீயணைப்பு நிலையம் திறக்கப்பட்டது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 10:18 pm

Din

புதுச்சேரி அருகே வில்லியனூரில் ஏற்கெனவே இருந்த இடத்திலிருந்து புதிய இடத்துக்கு மாற்றப்பட்ட தீயணைப்பு நிலையம் திறக்கப்பட்டது.

வில்லியனூா் தீயணைப்பு நிலையம் ஏற்கெனவே இருந்த இடத்திலிருந்து ஒதியம்பட்டு சாலையில் அமைந்துள்ள பழைய ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா தலைமையில் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், புதுவை மாநில ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் கலந்து கொண்டு தீயணைப்பு நிலையத்தை திறந்துவைத்தாா்.

விழாவில், தீயணைப்புத் துறை செயலா் கேசவன், உள் துறை சாா்புச் செயலா் ஹிரன், கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தீயணைப்புத் துறை கோட்ட அதிகாரி மனோகா் நன்றி கூறினாா்.