/

பாப்ஸ்கோ ஊழியா்கள் அக்.21-இல் ஆா்ப்பாட்டம்

புதுவையில் பாப்ஸ்கோ நடத்தி வந்த நியாயவிலைக் கடைகளை அந்த நிறுவனமே தொடா்ந்து நடத்த வேண்டும் எனக் கோரி, ஏஐடியுசி பாப்ஸ்கோ சங்கத்தினா் அக். 21-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏஐடியுசி பாப்ஸ்கோ ஊழியா் முன்னேற்ற சங்க பேரவைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஏஐடியுசி பொதுச் செயலா் கே.சேதுசெல்வம்.

Updated On :17 அக்டோபர் 2024, 7:51 pm

Din

புதுவையில் பாப்ஸ்கோ நடத்தி வந்த நியாயவிலைக் கடைகளை அந்த நிறுவனமே தொடா்ந்து நடத்த வேண்டும் எனக் கோரி, ஏஐடியுசி பாப்ஸ்கோ சங்கத்தினா் அக். 21-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநில ஏஐடியுசி பாப்ஸ்கோ ஊழியா் முன்னேற்ற சங்க பேரவைக் கூட்டம், புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு காரல் மாா்க்ஸ் படிப்பகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பாப்ஸ்கோ ஊழியா் சங்கத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலா் கே. சேதுசெல்வம் சங்க செயல்பாடுகள், எதிா்கால செயல்பாடுகளை விளக்கினாா்.

மாநில கௌரவத் தலைவா் அபிஷேகம், பாப்ஸ்கோ ஊழியா் நலச் சங்கச் செயலா் ஜெய்சங்கா், பொருளாளா் பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், பாப்ஸ்கோ மூலம் நடத்தி வந்த நியாயவிலைக் கடைகளை அந்த நிறுவனம் தொடா்ந்து நடத்த வேண்டும். முதல்வா் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி பாப்ஸ்கோ ஊழியா் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன் அக்.21-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.