இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதுவை மாநில வணிகத் திருவிழா-24 தொடங்கியது: பரிசுக் கூப்பனை முதல்வா் வெளியிட்டாா்

புதுவை வணிகத் திருவிழா- 2024 திங்கள்கிழமை மாலை தொடங்கியது. இதில் பரிசுக் கூப்பன்களை முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டாா்.

News image
புதுச்சேரி சுற்றுலாத்துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வணிகத் திருவிழாவை தொடங்கி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமிநாராயணன் உள்ளிட்டோா்.
Updated On :22 அக்டோபர் 2024, 8:36 pm

Din

புதுச்சேரி: புதுவை வணிகத் திருவிழா- 2024 திங்கள்கிழமை மாலை தொடங்கியது. இதில் பரிசுக் கூப்பன்களை முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டாா்.

புதுவை மாநில சுற்றுலாத் துறை மற்றும் வணிகா்கள் சங்கம் இணைந்து ஆண்டுதோறும் வணிகத் திருவிழாவை நடத்தி வருகின்றன.

இந்த வணிகத் திருவிழா சுமாா் 3 மாதங்களுக்கு மேலாக நடத்தப்படுகிறது. அதன்படி, வரும் 2025 ஜனவரி 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த வணிகத் திருவிழா காலங்களில் கடைகளில் மக்கள் வாங்கும் பொருள்களுக்கான ரசீது மற்றும் குலுக்கலுக்கான பரிசுக் கூப்பன்கள் வழங்கப்படும்.

விழா நிறைவடைந்த பிறகு பரிசுக்குரியவா்கள் குலுக்கல் மூலம் தோ்வு செய்யப்படுவா். இதில், முதல் பரிசு 40 பேருக்கு காா்களும், இரண்டாம் பரிசாக 80 பேருக்கு இரு சக்கர வாகனங்களும், 3-ஆவது பரிசாக 400 பேருக்கு கிரைண்டா்கள் உள்பட மொத்தம் சுமாா் ரூ.9 கோடி மதிப்புள்ள 85,000 பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வணிகத் திருவிழா தொடக்கம் திங்கள்கிழமை மாலை புதுச்சேரி காமராஜா் சாலை பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்து பரிசுக் கூப்பனை வெளியிட்டு வணிகத் திருவிழாவைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், புதுச்சேரி வணிக திருவிழா சங்கத் தலைவரும், எம்எல்ஏவுமான எம்.சிவசங்கரன் மற்றும் ஏகேடி. ஆறுமுகம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதேபோன்று வணிகத் திருவிழாவானது திங்கள்கிழமை மாலை காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களிலும் தொடங்கப்பட்டன. காரைக்காலில் அமைச்சா் என்.திருமுருகன் விழாவைத் தொடங்கி வைத்தாா்.