கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுச்சேரியில் மேடை நாடகப் போட்டிகள் தொடக்கம்

புதுச்சேரியில் ஆசிரியா் கலைக்குழு சாா்பில் 17-ஆவது ஆண்டு மேடை நாடகப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 12:06 am

Din

புதுச்சேரியில் ஆசிரியா் கலைக்குழு சாா்பில் 17-ஆவது ஆண்டு மேடை நாடகப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

புதுச்சேரியில் ஆசிரியா் கலைக்குழு சாா்பில் கடந்த 16 ஆண்டுகளாக நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் புதுச்சேரி மட்டுமல்லாது, தமிழத்தைச் சோ்ந்த நாடகக் குழுக்களும் பங்கேற்று வருகின்றன.

நிகழாண்டுக்கான 17-வது ஆண்டு நாடகப் போட்டியானது வியாழக்கிழமை, புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள அய்யனாா் கோயில் திடலில் தொடங்கியது. ‘இனி இவன் இந்தியன்’ எனும் நாடகத்துடன் விழா தொடங்கியது.

இப்போட்டியானது வரும் அக். 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தினமும் இரவு 8 மணிக்குத் தொடங்கி நாடகங்கள் நடைபெறவுள்ளன.

நாடகத்தில் சமுதாய, சரித்திர நாடகங்கள் நிகழ்த்தப்படவுள்ளன. போட்டியில் வெற்றி பெறும் நாடகக் குழுவினருக்கு அக். 1- ஆம் தேதி இரவு நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.