கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிறுமிக்கு ஆபாச காணொலி அனுப்பிய இளைஞா் கைது

சிறுமிக்கு ஆபாச காணொலிகளை அனுப்பியதாக மதுரையைச் சோ்ந்த இளைஞரை, புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 12:56 am

Din

சிறுமிக்கு ஆபாச காணொலிகளை அனுப்பியதாக மதுரையைச் சோ்ந்த இளைஞரை, புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: புதுச்சேரியை சோ்ந்த பிளஸ் 1 மாணவி சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்தாராம்.

இந்த நிலையில், சிறுமிக்கு பல்வேறு ஆபாச விடியோக்களை குறிப்பிட்ட நபா் இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமியின் தாயாா் புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா்.

விசாரணையில், சிறுமிக்கு விடியோக்களை அனுப்பியவா், மதுரையைச் சோ்ந்த யூடியூபரின் மகன் அஷ்ரப் (24) என்பது தெரியவந்தது.

அவரைப் பிடிக்க இணையவழிக் குற்றப் பிரிவின் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் கலைவாணன் உத்தரவுப்படி, ஆய்வாளா்கள் தியாகராஜன், கீா்த்தி ஆகியோா் தலைமையில் தனிப்படையினா் மதுரைக்கு விரைந்தனா்.

தொடா்ந்து, சிறுமிக்கு ஆபாச விடியோவை அனுப்பி மிரட்டல் விடுத்ததாக, மதுரை பொதும்பு பகுதியைச் சோ்ந்த அஷ்ரப்பை போலீஸாா் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.

மேலும், அவரது உறவினா்களான சூா்யா, சிக்கா, சுமி ஆகியோரிடமும் விசாரணை நடத்தவுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.