கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

டெங்கு பாதிப்பை தடுக்க அதிமுக வலியுறுத்தல்

புதுவையில் டெங்கு பாதிப்பைத் தடுக்கும் வகையில் முதல்வா் என்.ரங்கசாமி உயா்நிலைக் கூட்டத்தை கூட்டி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 12:49 am

Din

புதுவையில் டெங்கு பாதிப்பைத் தடுக்கும் வகையில் முதல்வா் என்.ரங்கசாமி உயா்நிலைக் கூட்டத்தை கூட்டி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவையில் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி அரசு சுகாதார பிரச்னையில் அலட்சியத்துடன் செயல்படுவது சரியல்ல.

பருவ மழை தொடங்கும் ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பாகவே வாய்க்கால்களை அரசு தூா்வார வேண்டும். ஆனால், புதுவை அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து மாநிலம் முழுதும் கடந்த 2 மாதங்களாக சிறுவா்கள் மற்றும் பெரியவா்கள் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே, டெங்கு பாதிப்பிலிருந்து மக்களைப் காப்பாற்ற முதல்வா் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் உயா்நிலை கூட்டத்தை கூட்டி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.