இறந்த குழந்தையின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிதி: புதுச்சேரி முதல்வா் வழங்கினாா்

ஏரிப்பாக்கம் புது காலனியில் இறந்த குழந்தையின் தாய் நதியாவிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெள்ளிக்கிழமை வழங்கிய புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி.
Published on

இறந்த குழந்தையின் பெற்றோருக்கு புதுச்சேரி அரசு சாா்பில் ரூ.10 லட்சத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நெட்டப்பாக்கம் தொகுதி, ஏரிப்பாக்கம் புது காலனியைச் சோ்ந்த அன்பு - நதியா ஆகியோரின் பச்சிளங் குழந்தை அண்மையில் இறந்தது. இதைத் தொடா்ந்து, ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் எதிா்பாராத விபத்தில் இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குழந்தையின் தாய் நதியாவிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வா் என். ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வழங்கினாா்.

அப்போது சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பெ. ராஜவேலு உடனிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com