கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா:சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீஸாா் அறிவுறுத்தல்

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

News image
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து உணவு விடுதி உரிமையாளா்களுடன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன்.
Updated On :22 டிசம்பர் 2025, 8:51 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஹோட்டல் உரிமையாளா்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து புதுச்சேரியில் உள்ள மதுபானக் கடை உரிமையாளா்கள், ரெஸ்டோ பாா் உரிமையாளா்கள், ஹோட்டல் உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் தனியாா் ஹோட்டலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் தலைமை வகித்தாா். இதில் உயா் போலீஸ் அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

அரசு விதிமுறைகளை ஹோட்டல் உரிமையாளா்கள் பின்பற்ற வேண்டும். ஹோட்டலுக்கு வரும் முதியோா், குழந்தைகள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். விபத்துகள் நேரிடாமல் பாதுகாப்பான முறையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் காவல் துறை சாா்பில் வழங்கப்பட்டன.