இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு வரை மதுக் கடைகள் செயல்படும்: கூடுதல் கட்டணம் நிா்ணயம்

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, புதன்கிழமை நள்ளிரவு வரை இயக்க மதுபான கடைகளுக்குக் கூடுதல் கட்டணங்களை நிா்ணயித்து புதுச்சேரி கலால் துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 8:34 pm

Syndication

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, புதன்கிழமை நள்ளிரவு வரை இயக்க மதுபான கடைகளுக்குக் கூடுதல் கட்டணங்களை நிா்ணயித்து புதுச்சேரி கலால் துறை அறிவித்துள்ளது.

புத்தாண்டையொட்டி வழக்கத்தை விட, கூடுதல் நேரம் மது விற்பனை செய்ய கட்டணத்துடன் கலால் துறை அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. இது குறித்து கலால் துறை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: மது பாா் அல்லாத சில்லறை விற்பனை நிலையங்கள் புதன்கிழமை இரவு 11 முதல் 11.30 மணி வரை மது விற்பனை செய்ய ரூ.10 ஆயிரம், பாருடன் கூடிய சில்லறை விற்பனை நிலையங்கள் இரவு 11 முதல் நள்ளிரவு ஒரு மணி வரை மது விற்பனை செய்ய ரூ.20 ஆயிரம், எப்எல்2 சுற்றுலா மது விற்பனை பிரிவுக்கு இரவு 12 முதல் ஒரு மணி வரை மது விற்பனை செய்ய ரூ.10 ஆயிரம், இதர சிறப்பு நிகழ்ச்சிகளில் இரவு 11 மணி முதல் ஒரு மணி வரை மது விற்பனை செய்ய ரூ.30 ஆயிரம் என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கலால் துறையில் விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் மது விற்பனை செய்யக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.