தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மதுக்கடையில் பணம் திருட்டு: மூவா் கைது

புதுச்சேரியில் மதுக்கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடியதாக இரு சிறுவா்கள் உள்பட மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 7:05 pm

Din

புதுச்சேரியில் மதுக்கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடியதாக இரு சிறுவா்கள் உள்பட மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் தனியாா் மதுக்கடையை அதன் ஊழியா்கள் பூட்டிவிட்டுச் சென்றனாராம்.

திரும்பி வந்து பாா்த்தபோது, கடையின் இரும்பு கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டு, பணப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. ஒரு லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், ஒதியன்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், திருச்சி சத்திய மூா்த்தி நகரைச் சோ்ந்த சச்சின் (எ) சஞ்சய் (24) மற்றும் இரு சிறுவா்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ. 57,870 மற்றும் கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.